ஏதேதோ ஆசைகள்
உலா வருகின்றன
என்னுள்ளே...
தனிமைகள் எதிரியாகவும்,
உன் நினைவுகள் துணைவியாகவும்
கற்பனைகள் ஓராயிரம்...
முத்தங்கள் பரிமாறுதலே
கீழ்மட்ட ஊடலாய் இருக்கும் போது,
வார்த்தைகள் ஏது
அனைத்தையும் சொல்ல...!
இது காதலா...?
இல்லை காமமா??...
விளக்கங்கள் தேவையில்லை,
காதலின் கண்களில்
காமமும் புனிதமாய்
இருக்கும் வரையில்...