அன்று- காதலின் பாதையில் கண்மூடி நடந்தான். இன்று- கல்லறை சுவற்றில் கவிதை வரைகின்றான். காலத்தை குற்றம் சொல்லும் காதலர் மத்தியில், காதலியை குற்றம் சொல்கிறான் இந்த- கல்லறை காவியத்தின் கதாநாயகன்.
எங்கோ இருக்கும் காதலியே!.. என்றாவது ஒரு நாள் உன்னை நான் சந்தித்தால் முதலில் பேசும் வார்த்தையை முழு அகராதியிலும் தேடுகிறேன்.. என்ன பேசுவேனடி உன்னிடத்தில்?...