காரணமின்றி கதைக்கிறோம்
இரவு முழுவதும்.
அன்றும் அப்படித்தான்
ஏதேதோ பேசினோம்
எதற்கும் தலைப்பில்லை...
(தலைப்புத்தான் தேவையா நமக்குள்ளான வார்த்தைப் பரிமாற்றத்திற்கு??...)
எப்படி இருக்காய்?...
சாப்பிட்டாயா?...
ஏன் லேட்?...
வெளியில போனாயா?...
என்ன செய்தாய் இன்டைக்கு?...
ம்ம்ம்.......
எல்லோரும் தூங்கிட்டாங்களா?...
நீ தூங்கலையா?....ஏன்?...
எனக்காகவா?...
.........
இப்படி -
வழமையான ஆரம்பம்தான் அன்றும்..
பேச்சின் நடுவே
கேட்டே விட்டேன்,
கேட்க நினைத்ததை...
"ஹேய் ..., நாம ரெண்டு பேரும் 'லவ்' பண்ணுவோமா??...."
தெளிவாகத்தான் கேட்டேன்,
விளங்காதவளாய்
மீண்டும் கேட்டாய்,
அப்போதுதான் புரிந்தது
நான்தான் ரொம்ப லேட் என்று...
இருந்தும்
மீண்டும் கேட்டேன் -
"நாம ரெண்டு பேரும் 'லவ்' பண்ணுவோமா??...."
.........................
.....................................
பெண்களுக்கேயான நாணம் உன்னை கொள்ளை கொண்டிருந்தது,
நிலாவின் தலமையில்
நட்சத்திரங்கள் உன்னிடம் முறையிட்டன -
"என்ன நீ...
இன்றைக்கு
எங்களை விடவும்
பிரகாசமாய் இருக்கிறாய்?..."
இவைகளையும் தாண்டிய
உன் மனப்போராட்டம்...
"அய்யோ....என்ன இவன்,
எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி திடீரெண்டு கேட்டுட்டானே..."
என்கிற உன் தவிப்பு...
இந்த அழகை எல்லாம்
முதல் முதலில்
அள்ளிக்க் கொண்டேன்
என் மனத்திரையில்...
..............................
"குறுகிய மௌனம்"
(அந்த நேரம் அதுதான் சிறந்தது என்று தெரிந்து வைத்திருந்தாள் போல...)
இருந்தும்
காத்திருந்தேன் சில நொடிகள்
தெரிந்த பதிலுக்காய்...
"அய்யோ....என்ன இப்படி கேட்குறீங்க?...உங்களுக்குத் தெரியாதா?..."
முட்டி மோதி வந்து விழுந்தன வார்த்தைகள்
பதில்களாய் அல்ல,
மீண்டும்
என்னை நோக்கிய கேள்விகளாய்...
இப்போ, நான் மாட்டி...
எப்படியோ....
சமாளித்து,
முற்றுப்புள்ளி வைக்காமல் முடித்துவிட்டு
வெளியில் வந்த போது
சொல்லிக்கொள்ளாமல் சென்று ரிலாக்ஸ் ஆனது
கஸ்ட்டப்பட்டு கதைத்துக் களைத்துவிட்ட மனசு...
...........................
கடைசியில் -
நம்மிடம் வந்து
தன் இயலாமையை
ஒப்புக்கொண்டன -
'வார்த்தைகள்'.
"மன்னிச்சிடுங்க,
எங்களாலும் முடியவில்லை
உங்களுக்குள்ளான உறவின் ஆழத்தை உச்சரிக்க..."