உனக்கு தேர்வு நெருக்கியிருந்த சமயம்தான், நமக்குள் காதலும் பிறந்தது.
அன்றிலிருந்து நம் கைபேசிகள் கதைக்காமல் இருந்ததில்லை...
அதிக நேரம் பேசி உன் படிப்பை கெடுக்க வேணாம்,
கொஞ்சம் போல பேசுவோம் என்றுதான் ஆரம்பிப்பேன் ஒவ்வொரு முறையும்...
கடைசியில், மணிக்கணக்கில் கதைத்த பிறகு -
"போதும் கொஞ்சமாச்சும் படி.....
இப்படியே பேசிட்டிருந்தால்,
தேர்வு எழுதும்போது என்னைத்தான் திட்டுவாய்..."
என்று சொல்லி வைத்துவிடுவேன்...
ஒரு பத்து நிமிடம் போனதும்,
மீண்டும் என் கைபேசியில் நீ அழைப்பாய்...
"என்ன..?"
"இவளவு நேரமும் படித்துவிட்டேன், கொஞ்ச நேரம் பேசுவோமே...!!"
கெஞ்சலுடன் கேட்பாய் நீ...
செல்லமாக கூட திட்ட முடியாமல்
சிரித்தே விடுவேன் நான் -
வழிந்துகொண்டிருக்கும் உன் காதலை உணர்ந்தவனாய்..!!