Nov 30, 2011

**********************

கனவு காண 
கொள்ளை ஆசை எனக்கு.-

ஒரு தடவை 
என் கனவில் 
நீ வந்ததிலிருந்து..!

Nov 29, 2011

*******************

காத்திருக்க இயலும்
கொஞ்ச காலம்தானே 
இந்தப் பிரிவு என்று

ஆனால் -
ஒவ்வொரு மாதமும் 
உன் பக்கமிருக்கத் துடிப்பது -
நீ வலியால் அவஸ்தையுறும்
அம் மூன்று நாட்களே..!

Nov 27, 2011








இன்று எனக்கு காய்ச்சல் -
நீ மழையில் நனைந்தாயா..?

Nov 22, 2011

ஒரு முத்தம் போதும் அன்பே..!























உன்னை பார்த்த பிறகு
நின்று போனதெந்தன் உலகு
என் இதயம் மட்டும் இங்கே
துடிப்பது ஏனோ..!

என் நெஞ்சில் நீயும் உதிக்க
நான் என்ன தவம் செய்தேன்
என் கள்ள கண்கள் உன்னை 
தேடுவதேனோ..!

பாதை ஓரம் நீயும் 
என் பார்வை சுழலும் தன்னால் 
புரியாமல் செல்லும் கால்கள்
உன் பின்னால்..!

கெஞ்சிக் கேட்டு பார்த்தேன்
கண்ணால் பேசி சென்றாய்
நெஞ்சில் உன்னை சேர்த்தேன்
காதல் வாசம் தந்தாய்..!

என் காதல் வாழும் கண்ணே
உன் மூச்சி காற்றில் என்றும்
ஒரு முத்தம் போதும் அன்பே
என் உலகம் மீண்டும் இயங்கும்..!

Nov 15, 2011

***********************




என் மடிக்கனனியின் 
தட்டச்சுப் பலகையில் 
உன் பெயரில் வரும்
ஐந்தெழுத்துக்களே
அதிகமாக அழிந்துள்ளன...!

Nov 13, 2011

என்னை உணர்கிறாயா...?


சொல் -

ஒவ்வொரு பொழுதிலும்
உன்னோடு நானிருக்கிறேனா...?

உன் ஒவ்வொரு நினைவுகளும்
என்னையே சுமந்திருக்கின்றனவா...?

பார்வையில்
பயணத்தில்
சோகத்தில்
சுவாசத்தில்
மாலையில் 
மௌனத்தில்
வார்த்தையில்
வாசத்தில்
என
ஒவ்வொரு நிலையிலும் 
என்னை உணர்கிறாயா...?

சொல் -
எந்த நிலையில்
உன்னோடு நானில்லை என்று -
'என் காதலின் குறையை கண்டறிய..!'

Nov 10, 2011

உனக்காகவா...?


பொழுது புலர்ந்ததும்
அழகான பறவைகள் எல்லாம் 
உந்திசை நோக்கி
பறந்து செல்வது -

உணவைத் தேடியா...? 
இல்லை
உன்னைத் தேடியா..??