Oct 29, 2010

காரணம்??...


கண்களால் பேசுவார்களாம்
காதலர்கள்.
இங்கு -
கண்கள் பார்க்கவே 
காரணம் கேட்கிறாள்
என் காதலி...

Oct 28, 2010

கவிதை..

கனவுகள், 
கற்பனைகள்,
காதல் நினைவுகளின் 
அரங்கேற்றம். 

Oct 23, 2010

திரை.

உன்னைப்பார்த்துக்
கண்ணடிப்பதனால் -
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 
மேகத் திரையிடுகிறேன் 
கண்மணியே!...

Oct 20, 2010

We dnt kw, bt...

உனக்கும் தெரியாது, 
எனக்கும் தெரியாது - நம்
காதலுக்கு தெரியும் 
நான் உன்னை காதலிப்பது...

Oct 19, 2010

புன்னகை அரசி...

பாதை ஓரத்தில்
பரிதாபப் பார்வை,
பசியின் கொடுமைதான்
பார்த்ததும் புரிந்துகொண்டேன்.

வயதும் குறைவு, உடலில்
ஆடையும் குறைவு.
அழுக்காய் இருப்பதில்தான்
அலாதிப்பிரியம் போல...

பால்குடி மறந்து
பலனாலாகிருக்காது,
பச்சிளம் வயதில்
சுயதொழில் முயற்சி.

அவள் நிலை சொல்லியது
அவள் நிலைமையை,
அவள் பார்வை சொல்லியது
அவள் தேவைகளை...

வாய்களில் மட்டும் வார்த்தையில்லை??...
"ஊமை என்பது
அவள் தவறல்ல
கடவுளின் மறதி நிலைதான்."

 உயிர்கொண்டு உலாவரும்
இச்சிருமிதான் - 
பேசமுடியாத வறுமையோ!!...

இந்த நிலையில் கூட
இதழ்களில் சிறு புன்னகை.
'நான் கொடுத்த 
10 /= நோட்டுக்கு
நன்றி கூறுகிறாள் போல...'

இத்தனைக்கும்
உண்மை இதுதான் -
இவளொன்றும் 
அநாதைச் சிறுமியல்ல,
"நான் கண்ட
புன்னகை அரசி."

Oct 17, 2010

கல்வி.

கனவுக்கு
தடைபோட்டு,
இரவுக்கு
எடைபோட்டு,
இவனும் 
படிக்கிறான் -
        "பல்கலைக்கழகத்தில்"

உன் பார்வைக்காய்...

வேதனையின் 
விளிம்பிலிருந்து
ஏங்குகிறேன் - உன் 
கடைக்கண் பார்வைக்காய்...

Oct 16, 2010

கனவுக் காதல்...

இப்போதெல்லாம் 
கனவுகளை
காதல் செய்கிறேன்.
காரணம் -

கனவில் மட்டுமே
என்னை - 
நீ காதலிப்பதால்...

Oct 14, 2010

பைத்தியக்காரன்.

அமாவாசை இருளில்
தொலைந்த சில இரவுகளை
பகலில் தேடுகிறான் - இந்த
இளம் பைத்தியக்காரன்...

Oct 13, 2010

தாஜ்மஹால்.



உலக 
அதிசயங்களில் 
ஒரு 
கல்லறை...

Oct 12, 2010

Be with me...

















உன்னை விட்டுப் பிரிவதில் 
துளி கூட சம்மதமில்லை...

'போகாதே நில்' என்று
உரிமையோடு தடுக்கும் 
என் கரங்களை 
உதாசீனம் செய்கிறாய்.

'அய்யோ, நான் சீக்கிரம் போகணும்பா..!"
என்ற சின்ன வாசகத்தை
கெஞ்சும் என் விழிகளுக்கு 
விடையென வீசுகிறாய்.

அச்சம் கலந்த பயத்தில்,
போக துடிக்கும் பதட்டத்தில்,
உடைந்து போகும் 
என் உணர்வுகளை 
ஓரக்கண்ணால் நோக்குகிறாய்.

இப்போதும்-
உன்னை விட்டு பிரிவதில்
துளி கூட சம்மதமில்லை,

உன் துப்பட்டாவை பிடித்து
பின்னால் ழுக்கின்றன
என் சுவாசக் காற்று...

Oct 6, 2010

காதல் இரவுகள்...

என்
ஒவ்வொரு இரவும்
அமாவாசையாக கழிவது 

ஏனடி?


நிலவு -
நீ என்பதனால?...

Oct 5, 2010

தனிமை...



இப்போதெல்லாம்
என்னைத்தேடி
தனிமைகள்
தவிப்பது ஏனடி?...

Oct 4, 2010

மனச்சாட்சி...


உனக்கும் மனதிருக்கு
ஓர் நாள் உணர்ந்துகொள்வாய்
அப்போ புரியும் -
இன்றைய என் வேதனைகள்...

Oct 3, 2010

???...

இப்போதெல்லாம்
என் உதடுகள்
உளறுவது
கருவில்லாத
கவிதைகளைத்தான்

Oct 2, 2010

லவ் பண்ணு....

என்னையறியாமல்
கண்கள் உன்னை
கலங்கவைதிருப்பின்
காதலித்து கண்டித்துவிடு
கண்மணியே....

Oct 1, 2010

ஸ்பரிசம் ...

நீ தொடுகையில்
தன்னை மறக்காமல் இருக்க
இந்த மலர்களால் மட்டும்தானே
முடிகிறது...