Jan 12, 2011

*******************


ரசிப்பதற்கு அல்ல
இவன் வார்த்தைகள், 
அவள்
உணர்ந்துகொள்வதற்கு...

Jan 10, 2011

புகைப்படத்தில் 'நீ'...

வார்த்தைகளினாலும்,
மௌனங்களினாலும்
பகிர்ந்துகொள்கிறேன்
நம் உறவினை... 

புகைப்படத்திலும் -
தலை குனிந்து
வெட்கித்துக்கொள்கிறாய்
நீ...!!

Jan 9, 2011

கிண்டல்...

எளிய தமிழில் 
எல்லோரும் புரியும்படி
என் எண்ணங்களை
எடுத்துரைத்தேன்...

"கவிஞ்சன் " என்று 
கேலி செய்யுது
சமூகம். 

Jan 7, 2011

அர்த்தப்பட்ட மௌனங்கள்...














யாரும் அறியா
அர்த்தங்களில்
பரிமாறப்பட்ட
மௌனங்கள் 
நமக்குள்.

புரிந்து கொண்ட போது
உலகமே
அர்த்தமாகிப் போனது, 

பிரிந்து சென்ற போது
உயிர்சுமப்பதே
அர்த்தமின்றி தோணுது...

Jan 6, 2011

தண்டச்சோறுகள்...


பல்கலைக்கழகம் 
சென்று
படித்து விட்டு
வந்த பின்னும்
அங்கீகாரம் இல்லை -

என்னைப் போன்று 
சிலருக்கு...

Jan 4, 2011

மீட்டல்...

கவிதைகள் 
என்னும் பெயரில், 
நம் கல்லூரி வாழ்வின்
கரையா நினைவுகளை
மீட்டிப்பார்க்கின்றன -
என் பேனா முனைகள்...

Jan 3, 2011

சமாந்தரங்கள்...















ஒட்ட முடியா
இரு கோடுகளாய் 
நீயும், 
நானும்...

'வளைவுகளிலாவது
முட்டி நின்று
சேர்ந்துகொள்வோம்'
என்ற நம்பிக்கையும்
அர்த்தமற்றுப் போனது -

'சமாந்தர வளைவுகளை'
தாண்டிய போது...

Jan 1, 2011

தாய்ப் பாசம்...

இறைவா...!
சாகும் வரை
வேண்டும்
சாதத்தில் 
சேர்ந்திருக்கும்
என்
தாயின் பாசம்.