நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Oct 21, 2011
நீயா..? நானா..?
ஒரு காதலின்
இரு பிரதிகள் -
நீயும், நானும்...!
நிசப்தங்களின் மத்தியில்
முத்தங்களின் பரிமாற்றம்...!
ஆசைகளை அடைந்துகொள்ள தொடரும்
விட்டுக் கொடுப்புக்களின் போராட்டம்...!
விட்டுக்கொடுப்பின் வேகம்
விளங்குது உன் கண்களில் -
தோற்பது
நீயா..? நானா..?
Oct 7, 2011
**************************
சத்தமின்றி முத்தமிடுகிறாய்,
கள்ளமின்றி காதல் செய்கிறாய்,
சின்னதான சண்டை வைக்கிறாய்,
சிரிக்கும் போது என்னைக் கொள்கிறாய்...!
ரசித்தபடி இடையைப் பிடித்து
இழுத்தணைத்துக் கொள்கிறேன் -
என்னுள்ளே நுழைந்து,
உயிரோடு கலக்கிறாய்...!
Oct 2, 2011
**************************
காலங்கள் ஓடாதா...!
காத்திருப்புக்கள் ஓயாதா...!
தொலைதூரம் வந்த பின்
தொட்டுச்செல்லும் தென்றலில் தேடுகின்றேன் -
உன் சுவாசக் காற்றை...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)