Mar 7, 2011

மீண்டும் மரத்தில் மனிதன்...

























பாசக் குரல்கள்,
பரிதாபக் கருணைகள், 
ஆதரவுக்குக் கைகள்
அழுதுகொள்ள தோள்கள்...

அவன் இவன் இன்றி, 
யாவும் நாமே என்ற 
ஒற்றுமையின் சின்னங்களை
ஒருசேரக் கண்டேன்
ஆழிப் பேரலையின்
அசாதாரண அத்துமீறல்
நடந்தேறிய
சில தினங்களில்.

காலம் பொல்லாதவன் -
காயத்திற்கு   மருந்திட்டான், 
மனங்களை மாற்றியமைத்தான், 
மனிதன் - 
மீண்டும் மரமேறினான்.

அன்று கண்ட 
அதே (சமூக) ஒற்றுமையை
இன்று காண்கிறேன் -
புயலடித்த மேகம் போல்...

Mar 6, 2011

*******************














காவியத்தில் இல்லாத,
காலங்கள் கண்டிராத
காதல் செய்வோமா
கண்மணியே...??