பாசக் குரல்கள்,
பரிதாபக் கருணைகள்,
ஆதரவுக்குக் கைகள்
அழுதுகொள்ள தோள்கள்...
அவன் இவன் இன்றி,
யாவும் நாமே என்ற
ஒற்றுமையின் சின்னங்களை
ஒருசேரக் கண்டேன்
ஆழிப் பேரலையின்
அசாதாரண அத்துமீறல்
நடந்தேறிய
சில தினங்களில்.
காலம் பொல்லாதவன் -
காயத்திற்கு மருந்திட்டான்,
மனங்களை மாற்றியமைத்தான்,
மனிதன் -
மீண்டும் மரமேறினான்.
அன்று கண்ட
அதே (சமூக) ஒற்றுமையை
இன்று காண்கிறேன் -
புயலடித்த மேகம் போல்...