Dec 19, 2011

******************

உன் மௌனம்களும் 
நானங்களும் 
காட்டிக் கொடுத்த பின்னும்
கண்களுக்குள் 
காதலை வைத்து 
இமைகளால் 
மூடி மறைக்காதே பெண்ணே...!

Dec 17, 2011

***************

என்ன செய்தாய் என்னை..?
என்னுலகம் நின்ற பிறகும்
நான் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கிறேனே 
உன்னை...!

Dec 15, 2011

*********************




"இன்று மட்டும்
எனக்கு விடுமுறை வேணும்..!"
நம்மைப் பார்த்து
கெஞ்சுகிறது
கட்டில்..!

Dec 14, 2011

*********************

நீ மறதியில்
விட்டுச் சென்ற கைக்குட்டையை
எல்லா மலரோடும்
ஒப்பிட்டு பார்த்தேன் -

தோற்று போனது
மலர்களின் வாசமே..!

Dec 11, 2011

**********************




"செல்லமா இருக்கிறேன்பா..!"
என்று நீ சொல்லும்
ஒற்றைச் சொல்லில்
துள்ளிக் குதிக்குது
என் காதல்..!

Dec 9, 2011

********************

உன் கண்ணைப் பார்த்து
கவிதை சொல்லவா..?

என் காதலின் 
நுழைவாயில்
உன் இரு
கண்களல்லவா...!

Dec 8, 2011

****************




உன் காலடியில் வரக் கூட 
தகுதி இல்லாதவன் என்றா
என்னை -
நக்கல் பார்வை பார்க்கின்றன
உன் காலணிகள்..!

Dec 5, 2011

*****************



"நெற்றியில் முத்தமிடுங்களேன்..."

ஆசையாய் நீ கேட்கையில் 
அள்ளிக்கொள்ள எண்ணுது
என் மனது..!

தள்ளி நின்று
தவிக்க வைக்கும் இப் -
பெண் மனது..!

Dec 3, 2011

**************************



வெள்ளைக் கலர் பிடிக்கும் அவளுக்கு. -
தெரிந்துகொண்டதிலிருந்து,
வெள்ளை மட்டுமே 
கலராய் உள்ளது எனக்கு...!

Dec 1, 2011

*********************

சிவந்த ஆப்பிளில் 
பனித்துளி படர்ந்தாட்போல்
அவள் கன்னத்தில் பூத்திருக்கும்
அந்த சில வியர்வைத் துளிகள்...!

Nov 30, 2011

**********************

கனவு காண 
கொள்ளை ஆசை எனக்கு.-

ஒரு தடவை 
என் கனவில் 
நீ வந்ததிலிருந்து..!

Nov 29, 2011

*******************

காத்திருக்க இயலும்
கொஞ்ச காலம்தானே 
இந்தப் பிரிவு என்று

ஆனால் -
ஒவ்வொரு மாதமும் 
உன் பக்கமிருக்கத் துடிப்பது -
நீ வலியால் அவஸ்தையுறும்
அம் மூன்று நாட்களே..!

Nov 27, 2011








இன்று எனக்கு காய்ச்சல் -
நீ மழையில் நனைந்தாயா..?

Nov 22, 2011

ஒரு முத்தம் போதும் அன்பே..!























உன்னை பார்த்த பிறகு
நின்று போனதெந்தன் உலகு
என் இதயம் மட்டும் இங்கே
துடிப்பது ஏனோ..!

என் நெஞ்சில் நீயும் உதிக்க
நான் என்ன தவம் செய்தேன்
என் கள்ள கண்கள் உன்னை 
தேடுவதேனோ..!

பாதை ஓரம் நீயும் 
என் பார்வை சுழலும் தன்னால் 
புரியாமல் செல்லும் கால்கள்
உன் பின்னால்..!

கெஞ்சிக் கேட்டு பார்த்தேன்
கண்ணால் பேசி சென்றாய்
நெஞ்சில் உன்னை சேர்த்தேன்
காதல் வாசம் தந்தாய்..!

என் காதல் வாழும் கண்ணே
உன் மூச்சி காற்றில் என்றும்
ஒரு முத்தம் போதும் அன்பே
என் உலகம் மீண்டும் இயங்கும்..!

Nov 15, 2011

***********************




என் மடிக்கனனியின் 
தட்டச்சுப் பலகையில் 
உன் பெயரில் வரும்
ஐந்தெழுத்துக்களே
அதிகமாக அழிந்துள்ளன...!

Nov 13, 2011

என்னை உணர்கிறாயா...?


சொல் -

ஒவ்வொரு பொழுதிலும்
உன்னோடு நானிருக்கிறேனா...?

உன் ஒவ்வொரு நினைவுகளும்
என்னையே சுமந்திருக்கின்றனவா...?

பார்வையில்
பயணத்தில்
சோகத்தில்
சுவாசத்தில்
மாலையில் 
மௌனத்தில்
வார்த்தையில்
வாசத்தில்
என
ஒவ்வொரு நிலையிலும் 
என்னை உணர்கிறாயா...?

சொல் -
எந்த நிலையில்
உன்னோடு நானில்லை என்று -
'என் காதலின் குறையை கண்டறிய..!'

Nov 10, 2011

உனக்காகவா...?


பொழுது புலர்ந்ததும்
அழகான பறவைகள் எல்லாம் 
உந்திசை நோக்கி
பறந்து செல்வது -

உணவைத் தேடியா...? 
இல்லை
உன்னைத் தேடியா..??

Oct 21, 2011

நீயா..? நானா..?



ஒரு காதலின் 
இரு பிரதிகள் -
நீயும், நானும்...!

நிசப்தங்களின் மத்தியில்
முத்தங்களின் பரிமாற்றம்...!

ஆசைகளை அடைந்துகொள்ள தொடரும்
விட்டுக் கொடுப்புக்களின் போராட்டம்...!

விட்டுக்கொடுப்பின் வேகம் 
விளங்குது உன் கண்களில் -
தோற்பது
நீயா..? நானா..?

Oct 7, 2011

**************************


















சத்தமின்றி முத்தமிடுகிறாய்,
கள்ளமின்றி காதல் செய்கிறாய்,
சின்னதான சண்டை வைக்கிறாய்,
சிரிக்கும் போது என்னைக் கொள்கிறாய்...!

ரசித்தபடி இடையைப் பிடித்து
இழுத்தணைத்துக் கொள்கிறேன் -
என்னுள்ளே  நுழைந்து, 
உயிரோடு கலக்கிறாய்...!

Oct 2, 2011

**************************

காலங்கள் ஓடாதா...!
காத்திருப்புக்கள் ஓயாதா...!

தொலைதூரம் வந்த பின்
தொட்டுச்செல்லும் தென்றலில் தேடுகின்றேன் -
உன் சுவாசக் காற்றை...!

Jul 20, 2011

*******************


காரணங்கள் தேட வேண்டாம்
என் காதலை நிராகரிக்க, 
மெளனமாகவே இரு...

வலிகள் இன்றிய தவிப்புடன்
வாழ்ந்து பார்க்கிறேனே
சிலகாலம்...!!! 

Jun 13, 2011

*******************

உன்னோடு சேர்ந்திருக்கும் 
போதெல்லாம், 
"காதலைச் சொல்லா
கோழைப் பயல்" என
என்னைப்பார்த்து சிரிக்கிறாள் -

உன் நிழலுருவில்,
என் காதலி...!

Jun 5, 2011

காத்திருப்பு...

என் 
கடிகாரத்தின் முட்கள் கூட
கன்னி உன் வருகைக்காய்
நான்கு திசைகளிலும் சென்று
நாட்கணக்காய்
காத்துக்கிடக்கின்றதே...!

May 31, 2011

Happy Birthday to you my girl...

மலரொன்று பிறந்ததை 
மறந்த மடையன்
இவன்..

"பிறந்த நாள் வாழ்த்துக்கள்" 
தோழி...!

May 21, 2011

*******************

கசக்கிப் பீய்த்து
தூரத்தில் தூக்கி எறியவா
பறித்துக்கொண்டாய் 
என் மனதை...?

விட்டு வைத்திருக்கலாம்
இன்னும் சிறிது காலம்,
பசுமையாய் இருந்திருக்கும்
உன்னோடான நினைவுகள்..!

கதறியழுது
கண்ணீர் தீர்ந்தபின்
கடைசியில் 
எஞ்சியதென்னவோ -

"ஏமாற்றப்பட்ட எண்ணங்களும், 
நிர்ப்பந்திக்கப்பட்ட நினைவுகளுமே..!"

May 14, 2011

*******************

நினைவுகள்
அரங்கேற்றும்
காதல் நாடகத்தில் 
கதாப்பாத்திரமாக
நீயும், 
நானும்...

அப்போதே
ஆரம்பமாகிவிட்டது
நம்
காதல் நாடகம், 

இன்னும் 
முடிவுகளின்றி 
தொடர்கிறது
இற்றைவரைக்கும்..!

May 10, 2011

*******************

உன்னுடன் பேசிய 
சில வார்த்தைகளைக் கொண்டு
உயிர்ப்பிக்கிறேன்
சில கவிதைகளை...

May 7, 2011

மர்மமான கனவுகள்...

புரியாத இரவதில்
இல்லாத இடமெங்கும்
என் பாதங்கள்
பயணிக்கின்றன..!

மங்கலான ஒளியில்
மங்கைபோல்  என்முன்னால்
மணம் வீசிப் போகிறாள்
அவள் யாரோ..?

அவள் பாதச்சுவடுகள் தேடி
என் பாதங்கள்
நகர்கின்றனவே..
எதற்காக..??

தூரத்தில் போவதால்
துரத்தும் பாதங்கள்
விடியலில் வீழ்ந்ததே..
எவ்வாறு..???

இப்போதெல்லாம் 
இங்கு -
மர்மமான இரவுகளும், 
மறையாத சுவடுகளுமே..!!

May 4, 2011

புதிது புதிதாய் நீ...

நீ அனுப்பும்
ஒவ்வொரு புகைப்படத்தை
பார்க்கும் போதும்,
புதிதாய் உன்னை
பார்ப்பதாய்   உணர்கிறேன்...

சின்னதாய்  ஒரு
பதற்றம்,  
ஆசை,
தவிப்பு...

அய்யோ..!
சொல்ல முடியா மாற்றங்கள் என்னில்.

Apr 12, 2011

*******************

இப்போதெல்லாம்
அடிக்கடி
தவறுகள் விடுகிறேனாம்.
சுட்டிக்காட்டுகிறார்
உயரதிகாரி...

அப்போதெல்லாம் -
உன்மீது கொண்டுள்ள
கண்மூடித்தனமான
காதலை எண்ணி
பெருமைப்பட்டுக்கொள்கிறது
மனசு...

Apr 10, 2011

*******************

உன்னைப் பற்றிய
கற்பனைகளை
எக்குத்தப்பா
உளறுகிறேன்...

"அடடா...!
அழகிய கவிதைகள்.." என்று
அள்ளிக் கொள்கிறது
சமூகம்...!

Apr 7, 2011

*******************

காலையில் எழுந்ததும்,
கண்களைத் திறக்காமல்
கைகளால் உன்னை
படுக்கையில் தேடும்போதுதான்
உணர்ந்து கொள்கிறேன் -


இவ்வளவு நேரமும்
உன்னோடு நானிருந்தது
'கனவில்தான்' என்பதை...

Apr 6, 2011

*******************

நல்ல நேரம் பார்த்து
வேலைக்கு போக
வாசலிலே வந்து
உன்முக தரிசனதுக்காய்
காத்து கிடக்கிறது
சூரியன்...

இன்னும் விடியலையே
என்றெண்ணி வீட்டுக்குள்ளயே
இருக்கிறாய் நீ...!

Apr 5, 2011

*******************

மற்றவர்
உனக்கெழுதிய
காதல் கடிதங்களை
என்னிடம் தந்து
வாசிக்க சொல்கிறாய்...

" அய்யய்யோ...!!
உன்னை மட்டும்தானே 
காதலித்தேன், 
அதிலும் போட்டியா...?? " 
என்று பதறுகிறது மனசு...

Apr 4, 2011

*******************

இந்த
ஓரவஞ்சனை கொண்ட
கடிகாரத்திடம்
கடுங்  கோபங்கொண்டு
கண்டபடி ஏசுகிறேன்...

பிறகென்ன -
"உன்னோடு இருக்கும் போது மட்டும் 
வேகமாக சுற்றுகிறது, 
நீ இல்லாத நொடிகளில் 
அசையவே மறுக்கிறதே...! " 

Mar 7, 2011

மீண்டும் மரத்தில் மனிதன்...

























பாசக் குரல்கள்,
பரிதாபக் கருணைகள், 
ஆதரவுக்குக் கைகள்
அழுதுகொள்ள தோள்கள்...

அவன் இவன் இன்றி, 
யாவும் நாமே என்ற 
ஒற்றுமையின் சின்னங்களை
ஒருசேரக் கண்டேன்
ஆழிப் பேரலையின்
அசாதாரண அத்துமீறல்
நடந்தேறிய
சில தினங்களில்.

காலம் பொல்லாதவன் -
காயத்திற்கு   மருந்திட்டான், 
மனங்களை மாற்றியமைத்தான், 
மனிதன் - 
மீண்டும் மரமேறினான்.

அன்று கண்ட 
அதே (சமூக) ஒற்றுமையை
இன்று காண்கிறேன் -
புயலடித்த மேகம் போல்...

Mar 6, 2011

*******************














காவியத்தில் இல்லாத,
காலங்கள் கண்டிராத
காதல் செய்வோமா
கண்மணியே...??

Feb 13, 2011

காதலா...? இல்லை காமமா??..

















உன்னை நேசிக்க
ஆரம்பித்ததிலிருந்து
ஏதேதோ ஆசைகள்
உலா வருகின்றன 
என்னுள்ளே...

தனிமைகள் எதிரியாகவும், 
உன் நினைவுகள் துணைவியாகவும்
கற்பனைகள் ஓராயிரம்...

முத்தங்கள் பரிமாறுதலே
கீழ்மட்ட ஊடலாய் இருக்கும் போது, 
வார்த்தைகள் ஏது
அனைத்தையும் சொல்ல...!

இது காதலா...? 
இல்லை காமமா??...

விளக்கங்கள் தேவையில்லை, 
காதலின் கண்களில்
காமமும் புனிதமாய்
இருக்கும் வரையில்...

Feb 7, 2011

*******************

கர்வம் கொண்ட 
என் தோட்டத்து 
பூக்கள் கூட 
தலை குனிகிறது -

கண்ணே உன்னழகை
கண்ட பிறகு...

Jan 12, 2011

*******************


ரசிப்பதற்கு அல்ல
இவன் வார்த்தைகள், 
அவள்
உணர்ந்துகொள்வதற்கு...

Jan 10, 2011

புகைப்படத்தில் 'நீ'...

வார்த்தைகளினாலும்,
மௌனங்களினாலும்
பகிர்ந்துகொள்கிறேன்
நம் உறவினை... 

புகைப்படத்திலும் -
தலை குனிந்து
வெட்கித்துக்கொள்கிறாய்
நீ...!!

Jan 9, 2011

கிண்டல்...

எளிய தமிழில் 
எல்லோரும் புரியும்படி
என் எண்ணங்களை
எடுத்துரைத்தேன்...

"கவிஞ்சன் " என்று 
கேலி செய்யுது
சமூகம். 

Jan 7, 2011

அர்த்தப்பட்ட மௌனங்கள்...














யாரும் அறியா
அர்த்தங்களில்
பரிமாறப்பட்ட
மௌனங்கள் 
நமக்குள்.

புரிந்து கொண்ட போது
உலகமே
அர்த்தமாகிப் போனது, 

பிரிந்து சென்ற போது
உயிர்சுமப்பதே
அர்த்தமின்றி தோணுது...

Jan 6, 2011

தண்டச்சோறுகள்...


பல்கலைக்கழகம் 
சென்று
படித்து விட்டு
வந்த பின்னும்
அங்கீகாரம் இல்லை -

என்னைப் போன்று 
சிலருக்கு...

Jan 4, 2011

மீட்டல்...

கவிதைகள் 
என்னும் பெயரில், 
நம் கல்லூரி வாழ்வின்
கரையா நினைவுகளை
மீட்டிப்பார்க்கின்றன -
என் பேனா முனைகள்...

Jan 3, 2011

சமாந்தரங்கள்...















ஒட்ட முடியா
இரு கோடுகளாய் 
நீயும், 
நானும்...

'வளைவுகளிலாவது
முட்டி நின்று
சேர்ந்துகொள்வோம்'
என்ற நம்பிக்கையும்
அர்த்தமற்றுப் போனது -

'சமாந்தர வளைவுகளை'
தாண்டிய போது...

Jan 1, 2011

தாய்ப் பாசம்...

இறைவா...!
சாகும் வரை
வேண்டும்
சாதத்தில் 
சேர்ந்திருக்கும்
என்
தாயின் பாசம்.