இது என்ன வாழ்க்கைங்க?.... என்று கேட்க தோனுது.... அட ஆரம்பமே சலிக்குதே என்று யோசிக்கிறீங்களா?..அப்படி தோண காரணமும் இருக்குங்க...
Oh ...கொஞ்சம் பொறுங்க, ஆரம்பத்திலேயே இத சொல்லிக்கிறன். "என் மனசின் வார்த்தைகளுக்கு உயிரோட்டமான உருவம் கொடுக்க எனக்கு தெரியல, But எனக்கு தெரிஞ்ச மொழி நடைய உங்களால புரிஞ்சுக்க முடியும் என்ற நம்பிக்கையில சொல்றன்...."
ஆமாங்க, எல்லோருக்கும் அவங்கட வாழ்கையில சில கணங்கள், சில நாட்கள், சில இடங்கள், சில சம்பவங்கள், சில சந்திப்புக்கள், சில நபர்கள் மறக்க முடியாதவையாகின்றன. இதுமட்டுமில்ல, இதுல இன்னும் பல அடங்கலாம். இவை அனைத்தும் அவங்கட வாழ்க்கைல நிலையான நினைவாக நிற்கும். சில சமயம் அவங்கட வாழ்கைய மாற்றியமைக்கும் சக்திகளாக கூட அமைஞ்சாலும் ஆச்சரியபடுவதக்கில்லீங்க...
அப்படித்தான் எனக்கும்,
சில கணங்கள்,
சில நாட்கள்,
சில சம்பவங்கள்,
சில சந்திப்புகள்,
சில வார்த்தைகள்,
சில வலிகள்..............என்றும் நிலையான நினைவாக நிற்குது... "என் இந்த பக்கத்தின் அதிகமான வார்த்தைகளுக்கு கருவாக இருப்பது கூட அவள்தான்.." என் வாழ்கையில சில மாற்றங்கள், சில மறக்க முடியாத கணங்கள் தந்தது அவள்தான். அட, எனக்கெண்டு ஒரு வாழ்க இருக்கு என்று எனக்கு உணர வைத்ததே அவள்தாங்க...
உங்கள எத்தன பேர் உங்கட வாழ்கைய உணர்ந்து வாழ்றீங்க?...
உங்கள நீங்க நேசிக்கிற அளவுக்கு OR அதற்கு மேல் உங்கள இன்னொரு ஜீவன் நேசிச்சால், அந்த நேசத்த நீங்க உணர்ந்தால்,...அப்போ உங்கட வாழ்கைய நீங்க உணர்ந்து கொள்வீங்க.....(அப்படித்தான் நான் உணர்ந்துகொண்டேன்). உங்கள அறியாம உங்கள ஒரு மாற்றம், அவளுக்காக வாழ்வதில்தான் வாழ்கைண்ட அர்த்தம் புரியும் என்கிற கிறுக்குத்தனமான ஒரு நம்பிக்க.......அட, அது நம்பிக்க மட்டுமில்லங்க, அதுவே உங்கள திருப்திப்படுதுகின்ற சந்தோஷமான கணங்களாக அமையும்....
உங்கள ஒண்டு கேட்கவா?....
அனைத்தையும் ஒரு சில வினாடிகுள்ள அடைஞ்ச திருப்தி உங்களுக்கு இருக்கா?...
ஆமாங்க, எல்லோருக்கும் அவங்கட வாழ்கையில சில கணங்கள், சில நாட்கள், சில இடங்கள், சில சம்பவங்கள், சில சந்திப்புக்கள், சில நபர்கள் மறக்க முடியாதவையாகின்றன. இதுமட்டுமில்ல, இதுல இன்னும் பல அடங்கலாம். இவை அனைத்தும் அவங்கட வாழ்க்கைல நிலையான நினைவாக நிற்கும். சில சமயம் அவங்கட வாழ்கைய மாற்றியமைக்கும் சக்திகளாக கூட அமைஞ்சாலும் ஆச்சரியபடுவதக்கில்லீங்க...
அப்படித்தான் எனக்கும்,
சில கணங்கள்,
சில நாட்கள்,
சில சம்பவங்கள்,
சில சந்திப்புகள்,
சில வார்த்தைகள்,
சில வலிகள்..............என்றும் நிலையான நினைவாக நிற்குது... "என் இந்த பக்கத்தின் அதிகமான வார்த்தைகளுக்கு கருவாக இருப்பது கூட அவள்தான்.." என் வாழ்கையில சில மாற்றங்கள், சில மறக்க முடியாத கணங்கள் தந்தது அவள்தான். அட, எனக்கெண்டு ஒரு வாழ்க இருக்கு என்று எனக்கு உணர வைத்ததே அவள்தாங்க...
உங்கள எத்தன பேர் உங்கட வாழ்கைய உணர்ந்து வாழ்றீங்க?...
உங்கள நீங்க நேசிக்கிற அளவுக்கு OR அதற்கு மேல் உங்கள இன்னொரு ஜீவன் நேசிச்சால், அந்த நேசத்த நீங்க உணர்ந்தால்,...அப்போ உங்கட வாழ்கைய நீங்க உணர்ந்து கொள்வீங்க.....(அப்படித்தான் நான் உணர்ந்துகொண்டேன்). உங்கள அறியாம உங்கள ஒரு மாற்றம், அவளுக்காக வாழ்வதில்தான் வாழ்கைண்ட அர்த்தம் புரியும் என்கிற கிறுக்குத்தனமான ஒரு நம்பிக்க.......அட, அது நம்பிக்க மட்டுமில்லங்க, அதுவே உங்கள திருப்திப்படுதுகின்ற சந்தோஷமான கணங்களாக அமையும்....
உங்கள ஒண்டு கேட்கவா?....
அனைத்தையும் ஒரு சில வினாடிகுள்ள அடைஞ்ச திருப்தி உங்களுக்கு இருக்கா?...
எனக்கு இருக்குங்க. வாழ்கையில இதற்கு மேல அடைய எதுவுமில்ல என்கிறளவு திருப்திய நான் அடஞ்சன். இந்தளவு திருப்திய எனக்கு தந்தது அவளது "அன்பும், காதலும்தான்"......அது மட்டும்தாங்க. அதுலதான் முழுமையான திருப்திய அடைய முடியும். உங்களுக்கு எப்படியோ தெரியில, நான் அனைத்தையும் அடைஞ்சது அவளது அன்பில்தான்...
ஒன்று மட்டும் இன்னும் புரியாம இருக்கு.
"எப்போ இந்த காதல் வந்திச்சு?.."
அழக பார்த்தோ, அந்தஸ்த பார்த்தோ வரலீங்க இந்த காதல். அப்படி வாறது காதல் என்கிறதில எனக்கு நம்பிக்க இல்ல. என்ன பொறுத்தமட்டும், ஒருத்தர ஒருத்தர் பழகும்போது இருவருக்குள்ளும் ஏற்படுகின்ற பரிமாற்றங்களினதும், புரிந்துனர்வுகளினதும் உச்சகட்டம்தான் "காதல்"... இத எத்தன பேர் ஒத்துகிறீன்களோ தெரியல, But கண்டதும் காதல், கதைத்ததும் காதல், கண்ணடித்ததும் காதல் என்கிற இந்த சினிமா காதலில எனக்கு இம்மியளவும் நம்பிக்க இல்ல, மரியாதையும் இல்ல....
இந்த காதல் எப்ப வந்திச்சு என்டுதான் எனக்கு தெரியல But சாகும் வரைக்கும் எனக்குள்ள இருக்கும் எனபதில உறுதி..........அதுதானே காதல், இல்லையா?..
.............................
....................................
..............................................
"அவள்"...
என்ட வாழ்கையில நான் சந்தோசமா இருந்த நாட்கள். வாழ்கயிண்ட ஒவ்வொரு நொடியும் சுவைச்சு வாழ்ந்த நாட்கள்.......(நினைக்கும் போதே இனிக்குதுங்க).
என் வாழ்கைய நான் வாழ்ந்த நாட்கள் இவ்வளவு குறுகியதா என்கிறத அவள் பிரிவிலதான் நான் உணர்ந்தன்...ஏன் இந்த பிரிவு?..
நிச்சயமாக அவள்ல எந்த பிழையும் இல்லேங்க, காலத்தின் கட்டளைதான் இந்த பிரிவு என்டு சொல்லவும் முடியில்ல.....
பிரிவு.......................................................வலிக்குது...
ம்ம்ம்...........சில கணங்கள், இந்த வலிகளால என்ன அறியாம என் கண்கள் ஈரமாவத நான் உணரன்...............ஆமாங்க, இற்றைவரைக்கும் என் இதயதில அவள், என்றைக்குமே அவள் மட்டும்தாங்க...
அப்புறம் எப்படி இதற்கு பிரிவென்று பெயராகும்???...
அப்புறம் எப்படி இதற்கு பிரிவென்று பெயராகும்???...
...........................
................................இன்னும் பக்கம் பக்கமாக எழுதலாம், But உணர்சிகளுக்கு எழுத்துரு கொடுக்கும் திறம எனக்கு கெடயாதுங்க.... ஏதோ, என் மனசின்ட உளறல்கள ஒட்டுக்கேட்டு உமிழ்ந்து விட்டன என் பேனா முனைகள்....
எப்படியோ ஆரம்பிச்சு எப்படியோ முடிக்கிறன், சரியா பிழையா தெரியல (இலக்கண பிழைகள் எனக்கு விதிவிலக்காக இருக்கட்டும்).
But , ஒன்டு மட்டும் நிச்சயம்.....
ஒவ்வருவரிண்ட வாழ்க்கையிலையும் மறக்க முடியாத சில நிலையான நினைவுகள் இருக்கும். அதுக்கு உயிர் கொடுக்கிறதே இந்த பிரிவுதான்...
அப்படியான பிரிவ நீங்க அடைஞ்சிருகயலா?..
அடையும் வர என் வார்த்தைகளின் உணர்ச்சிகள உங்களால புரிஞ்சுக்க முடியாது.....அப்படியான பிரிவ நீங்க உணரும்போது உங்களுக்கே கேட்க தோணும் -
"இது என்ன வாழ்க்கைங்க?...." என்று.