May 31, 2011
May 21, 2011
May 14, 2011
*******************
நினைவுகள்
அரங்கேற்றும்
இன்னும்
அரங்கேற்றும்
காதல் நாடகத்தில்
கதாப்பாத்திரமாக
நீயும்,
நானும்...
அப்போதே
ஆரம்பமாகிவிட்டது
நம்
காதல் நாடகம்,
இன்னும்
முடிவுகளின்றி
தொடர்கிறது
இற்றைவரைக்கும்..!
May 10, 2011
May 7, 2011
மர்மமான கனவுகள்...
புரியாத இரவதில்
இல்லாத இடமெங்கும்
என் பாதங்கள்
பயணிக்கின்றன..!
மங்கலான ஒளியில்
மங்கைபோல் என்முன்னால்
மணம் வீசிப் போகிறாள்
அவள் யாரோ..?
அவள் பாதச்சுவடுகள் தேடி
என் பாதங்கள்
நகர்கின்றனவே..
எதற்காக..??
தூரத்தில் போவதால்
துரத்தும் பாதங்கள்
விடியலில் வீழ்ந்ததே..
எவ்வாறு..???
இப்போதெல்லாம்
இங்கு -
மர்மமான இரவுகளும்,
மறையாத சுவடுகளுமே..!!
May 4, 2011
புதிது புதிதாய் நீ...
நீ அனுப்பும்
ஒவ்வொரு புகைப்படத்தை
பார்க்கும் போதும்,
புதிதாய் உன்னை
பார்ப்பதாய் உணர்கிறேன்...
சின்னதாய் ஒரு
பதற்றம்,
ஆசை,
தவிப்பு...
அய்யோ..!
சொல்ல முடியா மாற்றங்கள் என்னில்.
Subscribe to:
Posts (Atom)