புரியாத இரவதில்
இல்லாத இடமெங்கும்
என் பாதங்கள்
பயணிக்கின்றன..!
மங்கலான ஒளியில்
மங்கைபோல் என்முன்னால்
மணம் வீசிப் போகிறாள்
அவள் யாரோ..?
அவள் பாதச்சுவடுகள் தேடி
என் பாதங்கள்
நகர்கின்றனவே..
எதற்காக..??
தூரத்தில் போவதால்
துரத்தும் பாதங்கள்
விடியலில் வீழ்ந்ததே..
எவ்வாறு..???
இப்போதெல்லாம்
இங்கு -
மர்மமான இரவுகளும்,
மறையாத சுவடுகளுமே..!!
No comments:
Post a Comment