Apr 12, 2011

*******************

இப்போதெல்லாம்
அடிக்கடி
தவறுகள் விடுகிறேனாம்.
சுட்டிக்காட்டுகிறார்
உயரதிகாரி...

அப்போதெல்லாம் -
உன்மீது கொண்டுள்ள
கண்மூடித்தனமான
காதலை எண்ணி
பெருமைப்பட்டுக்கொள்கிறது
மனசு...

Apr 10, 2011

*******************

உன்னைப் பற்றிய
கற்பனைகளை
எக்குத்தப்பா
உளறுகிறேன்...

"அடடா...!
அழகிய கவிதைகள்.." என்று
அள்ளிக் கொள்கிறது
சமூகம்...!

Apr 7, 2011

*******************

காலையில் எழுந்ததும்,
கண்களைத் திறக்காமல்
கைகளால் உன்னை
படுக்கையில் தேடும்போதுதான்
உணர்ந்து கொள்கிறேன் -


இவ்வளவு நேரமும்
உன்னோடு நானிருந்தது
'கனவில்தான்' என்பதை...

Apr 6, 2011

*******************

நல்ல நேரம் பார்த்து
வேலைக்கு போக
வாசலிலே வந்து
உன்முக தரிசனதுக்காய்
காத்து கிடக்கிறது
சூரியன்...

இன்னும் விடியலையே
என்றெண்ணி வீட்டுக்குள்ளயே
இருக்கிறாய் நீ...!

Apr 5, 2011

*******************

மற்றவர்
உனக்கெழுதிய
காதல் கடிதங்களை
என்னிடம் தந்து
வாசிக்க சொல்கிறாய்...

" அய்யய்யோ...!!
உன்னை மட்டும்தானே 
காதலித்தேன், 
அதிலும் போட்டியா...?? " 
என்று பதறுகிறது மனசு...

Apr 4, 2011

*******************

இந்த
ஓரவஞ்சனை கொண்ட
கடிகாரத்திடம்
கடுங்  கோபங்கொண்டு
கண்டபடி ஏசுகிறேன்...

பிறகென்ன -
"உன்னோடு இருக்கும் போது மட்டும் 
வேகமாக சுற்றுகிறது, 
நீ இல்லாத நொடிகளில் 
அசையவே மறுக்கிறதே...! "