புதுமையான நாடகம்தான்
இந்தக் காதல்...
அவன் - கதாநாயகனாகவும்,
அவள் - கதாநாயகியாகவும்
புதியதொரு உலகில் - பல
கற்பனைக் கதாபாத்திரங்களுடன்
காலத்தினால் அரங்கேற்றப்படும்
அநியாயமான நாடகமே -
இந்த காதல்..!
இணைவுகள்
அல்லது
பிரிவுகள்.
கால காலமாக
இவைகள்தான்
இதன் -
இறுதி முடிவுகள்..!
இணைவோ / பிரிவோ
இரண்டிலுமே இன்பம் -
பிதற்றிகொள்ளும்
கற்பனை காவியர்கள்..!
அவனோ / அவளோ
தனக்கு கிடைப்பானா / கிடைப்பாளா
எனும் ஏக்கத்திலும்,
இன்னும்பல எதிர்பார்ப்புக்களிலுமே
கழிகிறது - நாடகத்தின்
கணநேர காட்சிகள்..!
தான் தேர்ந்தெடுத்த
அவனுடனோ / அவளுடனோ
வாழ்வை அமைத்துக்கொள்ள துடிக்கும்
பல சுவாரசியம்களினால்
அலுப்பின்றி பயணித்தாலும் -
திருமணம் என்னும்
கடைசிப் பாகத்தில்
வந்தடைகிறது
இதன் முடிவுகள்..!
கால காலமாக தொடரும்
அதே முடிவுகள்..!
இணைந்தவர்
நிஜவுலகில் இனிக்கிறார்,
பிரிந்தவர்
நினைவுலகில் மிதக்கிறார்..!
"அநியாய நாடகமா..?
காதலையா கொச்சைப்படுத்துகிறாய்...?
இவன் ஒரு காதல் துரோகி" யென
பொங்கியெழும் கதாநாயகர்களே / நாயகிகளே
கொஞ்சம் பொறும் -
என் காரணத்தையும் கேளும்.
நானும் ஒரு கதாநாயகனே..!!
கடவுளின் ஏட்டில்
காதலனுக்கு காதலி,
காதலிக்கு காதலன்
ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டனராமே..!
திரையிடப்பட்ட இவ்வுண்மையை
அறியா நாம் -
மனங்களை மாற்றிக்கொண்டிணைய
முயல்கிறோமே...!
நியாயமானதாக வேஷமிடப்பட்ட
அநியாயமில்லையா இது..??
கற்பனைகள் தவறில்லை,
கனவுகளும் தவறில்லை.
இவை -
இருவருக்கும்
இருந்தால் மட்டும் போதுமா..!
கடவுளின் ஏட்டிலும்
எழுதபட்டிருக்க வேணுமே..!!