Jul 14, 2013

கடவுளின் எழுத்து..!


புதுமையான நாடகம்தான்
இந்தக் காதல்...


அவன் - கதாநாயகனாகவும்,
அவள் - கதாநாயகியாகவும்

புதியதொரு உலகில் - பல
கற்பனைக் கதாபாத்திரங்களுடன்
காலத்தினால் அரங்கேற்றப்படும்
அநியாயமான நாடகமே -
இந்த காதல்..!


இணைவுகள்
அல்லது
பிரிவுகள்.

கால காலமாக 
இவைகள்தான்
இதன் -
இறுதி முடிவுகள்..!


இணைவோ / பிரிவோ
இரண்டிலுமே இன்பம் -

பிதற்றிகொள்ளும்
கற்பனை காவியர்கள்..!


அவனோ / அவளோ

தனக்கு கிடைப்பானா  / கிடைப்பாளா
எனும் ஏக்கத்திலும்,
இன்னும்பல எதிர்பார்ப்புக்களிலுமே
கழிகிறது - நாடகத்தின்
கணநேர காட்சிகள்..!


தான் தேர்ந்தெடுத்த 
அவனுடனோ / அவளுடனோ
வாழ்வை அமைத்துக்கொள்ள துடிக்கும்
பல சுவாரசியம்களினால் 
அலுப்பின்றி பயணித்தாலும் -

திருமணம் என்னும் 
கடைசிப் பாகத்தில்
வந்தடைகிறது
இதன் முடிவுகள்..!


கால காலமாக தொடரும்
அதே முடிவுகள்..!

இணைந்தவர் 
நிஜவுலகில் இனிக்கிறார், 

பிரிந்தவர்
நினைவுலகில் மிதக்கிறார்..!


"அநியாய நாடகமா..?
காதலையா கொச்சைப்படுத்துகிறாய்...?
இவன் ஒரு காதல் துரோகி" யென
பொங்கியெழும் கதாநாயகர்களே / நாயகிகளே 

கொஞ்சம் பொறும் -
என் காரணத்தையும் கேளும்.


நானும் ஒரு கதாநாயகனே..!!


கடவுளின் ஏட்டில்
காதலனுக்கு காதலி, 
காதலிக்கு காதலன்
ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டனராமே..!


திரையிடப்பட்ட இவ்வுண்மையை
அறியா நாம் -
மனங்களை மாற்றிக்கொண்டிணைய  
முயல்கிறோமே...!


நியாயமானதாக வேஷமிடப்பட்ட
அநியாயமில்லையா இது..??


கற்பனைகள் தவறில்லை, 
கனவுகளும் தவறில்லை.
இவை -
இருவருக்கும் 
இருந்தால் மட்டும் போதுமா..!

கடவுளின் ஏட்டிலும் 
எழுதபட்டிருக்க வேணுமே..!!

No comments:

Post a Comment