Jul 18, 2013

கொடூர மௌனம்..!


இன்னும்
எத்தனை நாட்கள்தான் 
இப்படிப் பேசாதிருந்து
என்னைக் கொல்லப்போகிறாய்..!

சண்டைகள் நமக்குள்
சாதாரணம்தான்
இருந்தும் - நீ 
பேசாது மௌனித்திருப்பது
என் மரணத்தின்
உச்சமே..!

கோபங்கொண்டு ஏசிவிட்ட
உதடுகளுக்குத் தெரிவதில்லை
மனதின் வலியும், 
கண்ணீரின் கனமும்..!

இன்று -

என் 
சுவாசத்தில்
சில தடங்கல்கள்..

என் 
நுகர்வுக்கலத்தில்
மரணத்தின் வாசனைகள்..

என்னுயிர்
பீய்த்தெடுக்கப்படுவதுபோல் 
ரண உணர்வுகள்..

வலிகள் -
இங்கு
எல்லாமே 
வலிகள்..

இவையெல்லாம் -


உன் பிரிவு
நிரந்தரம் என்பதை
எனக்குச் சொல்லும்
ஏற்பாடுகளா..??

இனியும்
கண நாள் தாங்காது
இந்த
காதல் ஜடம்;

என்னவளே -

என் 
மரணத்திற்கு முன்னராவது
உன்
மௌனம் களைப்பாயா...!! 

No comments:

Post a Comment