இன்னும்
எத்தனை நாட்கள்தான்
இப்படிப் பேசாதிருந்து
என்னைக் கொல்லப்போகிறாய்..!
சண்டைகள் நமக்குள்
சாதாரணம்தான்
இருந்தும் - நீ
பேசாது மௌனித்திருப்பது
என் மரணத்தின்
உச்சமே..!
கோபங்கொண்டு ஏசிவிட்ட
உதடுகளுக்குத் தெரிவதில்லை
மனதின் வலியும்,
கண்ணீரின் கனமும்..!
இன்று -
என்
சுவாசத்தில்
சில தடங்கல்கள்..
என்
நுகர்வுக்கலத்தில்
மரணத்தின் வாசனைகள்..
என்னுயிர்
பீய்த்தெடுக்கப்படுவதுபோல்
ரண உணர்வுகள்..
வலிகள் -
இங்கு
எல்லாமே
வலிகள்..
இவையெல்லாம் -
உன் பிரிவு
நிரந்தரம் என்பதை
எனக்குச் சொல்லும்
ஏற்பாடுகளா..??
இனியும்
கண நாள் தாங்காது
இந்த
காதல் ஜடம்;
என்னவளே -
என்
மரணத்திற்கு முன்னராவது
உன்
மௌனம் களைப்பாயா...!!
No comments:
Post a Comment