அழகுதான் பெண்ணே
உன் ஒவ்வொரு அசைவுகளும்..!
ரசித்துக்கொண்டே கழிக்கின்றேன்
என் ஒவ்வொரு பொழுதுகளையும்..!
அள்ளிக்கொள்ளதான் தெரியும்
உன்
அத்தனை அழகையெல்லாம்;
அன்றி -
வர்ணிக்கத் தெரியா
வார்த்தைப் பிச்சைக்காரன்தான் நான்...!
நல்ல வேளை
கம்பன் மரித்தான்;
இல்லையேல்
உன்னைப் பாட
கையேந்திருப்பான் - அந்த
வார்த்தைக் கடவுளிடம்..!
என் மௌன பாஷைகள்
உனக்குப் புரியும் - ஆதலால்
மௌன மொழிகளில் இங்கு
நான்தான் உனக்குக் கம்பன்..!
கர்வம் கொள் பெண்ணே
என்றும் -
அழகின் பேரழகி
நீயேதான்;
எனக்கும்,
எல்லோர்க்கும்...!!
உன் ஒவ்வொரு அசைவுகளும்..!
ரசித்துக்கொண்டே கழிக்கின்றேன்
என் ஒவ்வொரு பொழுதுகளையும்..!
அள்ளிக்கொள்ளதான் தெரியும்
உன்
அத்தனை அழகையெல்லாம்;
அன்றி -
வர்ணிக்கத் தெரியா
வார்த்தைப் பிச்சைக்காரன்தான் நான்...!
நல்ல வேளை
கம்பன் மரித்தான்;
இல்லையேல்
உன்னைப் பாட
கையேந்திருப்பான் - அந்த
வார்த்தைக் கடவுளிடம்..!
என் மௌன பாஷைகள்
உனக்குப் புரியும் - ஆதலால்
மௌன மொழிகளில் இங்கு
நான்தான் உனக்குக் கம்பன்..!
கர்வம் கொள் பெண்ணே
என்றும் -
அழகின் பேரழகி
நீயேதான்;
எனக்கும்,
எல்லோர்க்கும்...!!
No comments:
Post a Comment