Jul 30, 2013

அழகின் பேரழகி..!

அழகுதான் பெண்ணே
உன் ஒவ்வொரு அசைவுகளும்..!

ரசித்துக்கொண்டே கழிக்கின்றேன் 
என் ஒவ்வொரு பொழுதுகளையும்..!

அள்ளிக்கொள்ளதான் தெரியும்
உன் 
அத்தனை அழகையெல்லாம்;

அன்றி -
வர்ணிக்கத் தெரியா
வார்த்தைப் பிச்சைக்காரன்தான் நான்...!

நல்ல வேளை 
கம்பன் மரித்தான்;

இல்லையேல்
உன்னைப் பாட 
கையேந்திருப்பான் - அந்த
வார்த்தைக் கடவுளிடம்..!

என் மௌன பாஷைகள் 
உனக்குப் புரியும் - ஆதலால்  
மௌன  மொழிகளில் இங்கு
நான்தான் உனக்குக் கம்பன்..!

கர்வம் கொள் பெண்ணே 
என்றும் -
அழகின் பேரழகி 
நீயேதான்;

எனக்கும், 
எல்லோர்க்கும்...!!

No comments:

Post a Comment