அறிந்துகொள்
என் காதலி...!
பக்கமாய் இருந்தாலும்,
தூரமாய் சென்றாலும்;
நீ வைத்த காதல் செடி
என்னுள்ளே -
வளர்ந்துகொண்டேதான்
இருக்கின்றது...!
பிரிவு நோய் கொண்டு
பட்டுவிடக்கூடுமோ
இச்செடி யென
பயந்ததில்லை நான்..
காரணம் -
கண்கள் பார்த்து வளர்ந்த
காதல்ச்செடி இது ;
நம் நினைவுகள்
போதுமே
என்றும்
உயிர்த்து நிற்க...!!
No comments:
Post a Comment