உன்
ஒவ்வொரு வார்த்தைகளும்
பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன
என்னில்..!
மீண்டும் மீண்டும்
வாசித்துக்கொள்கிறேன் நான் -
நம் நினைவுகளில்
வசித்தபடி..!
உச்சரிப்பின் ஓசை கேட்டு,
காதலுக்குள் கரைந்துபோன
நம் விம்பம்கள்
உயிர்கொண்டேழுகின்றன...!
நம்
காதல் காட்சிகள் ஒவ்வொன்றும்
என்
கண் முன்னே..
ஏனோ -
கதவுகளை
அடைத்துக்கொள்கின்றன
என்னிரு கண்கள்...!
"இக்கனவுலகம் வேணாம்;
உன் கண்கள் பார்த்து
காதல் வார்த்த
என்
அவ்வுலகமே வேணும்..!"
அடம்பிடிக்கும் இதயம்,
இனிமேல்
அர்த்தமில்லா துடிப்பென
அடங்கிவிடுமோ...!!
துடிதுடிக்கும்
என்னிதயமே
இதையும்
தெரிந்துகொள் -
நீ அடங்கினாலும்
அருந்துவேன்
என்னவள் ஊட்டிய இக்
காதல் மதுவை...!!
No comments:
Post a Comment