Jul 15, 2013

உயிர்கொள்ளும் உன் வார்த்தைகள்..!


உன் 
ஒவ்வொரு வார்த்தைகளும்
பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன 
என்னில்..!

மீண்டும் மீண்டும்
வாசித்துக்கொள்கிறேன் நான் -
நம் நினைவுகளில் 
வசித்தபடி..!

உச்சரிப்பின்  ஓசை கேட்டு,
காதலுக்குள் கரைந்துபோன
நம் விம்பம்கள் 
உயிர்கொண்டேழுகின்றன...!


நம்
காதல் காட்சிகள் ஒவ்வொன்றும்
என் 
கண் முன்னே..

ஏனோ -
கதவுகளை 
அடைத்துக்கொள்கின்றன
என்னிரு கண்கள்...!


"இக்கனவுலகம் வேணாம்; 
உன் கண்கள் பார்த்து
காதல் வார்த்த 
என்
அவ்வுலகமே வேணும்..!"

அடம்பிடிக்கும் இதயம்,
இனிமேல் 
அர்த்தமில்லா துடிப்பென
அடங்கிவிடுமோ...!!


துடிதுடிக்கும் 
என்னிதயமே
இதையும் 
தெரிந்துகொள் -

நீ அடங்கினாலும் 
அருந்துவேன் 
என்னவள் ஊட்டிய இக் 
காதல் மதுவை...!!

No comments:

Post a Comment