Dec 19, 2011

******************

உன் மௌனம்களும் 
நானங்களும் 
காட்டிக் கொடுத்த பின்னும்
கண்களுக்குள் 
காதலை வைத்து 
இமைகளால் 
மூடி மறைக்காதே பெண்ணே...!

Dec 17, 2011

***************

என்ன செய்தாய் என்னை..?
என்னுலகம் நின்ற பிறகும்
நான் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கிறேனே 
உன்னை...!

Dec 15, 2011

*********************




"இன்று மட்டும்
எனக்கு விடுமுறை வேணும்..!"
நம்மைப் பார்த்து
கெஞ்சுகிறது
கட்டில்..!

Dec 14, 2011

*********************

நீ மறதியில்
விட்டுச் சென்ற கைக்குட்டையை
எல்லா மலரோடும்
ஒப்பிட்டு பார்த்தேன் -

தோற்று போனது
மலர்களின் வாசமே..!

Dec 11, 2011

**********************




"செல்லமா இருக்கிறேன்பா..!"
என்று நீ சொல்லும்
ஒற்றைச் சொல்லில்
துள்ளிக் குதிக்குது
என் காதல்..!

Dec 9, 2011

********************

உன் கண்ணைப் பார்த்து
கவிதை சொல்லவா..?

என் காதலின் 
நுழைவாயில்
உன் இரு
கண்களல்லவா...!

Dec 8, 2011

****************




உன் காலடியில் வரக் கூட 
தகுதி இல்லாதவன் என்றா
என்னை -
நக்கல் பார்வை பார்க்கின்றன
உன் காலணிகள்..!

Dec 5, 2011

*****************



"நெற்றியில் முத்தமிடுங்களேன்..."

ஆசையாய் நீ கேட்கையில் 
அள்ளிக்கொள்ள எண்ணுது
என் மனது..!

தள்ளி நின்று
தவிக்க வைக்கும் இப் -
பெண் மனது..!

Dec 3, 2011

**************************



வெள்ளைக் கலர் பிடிக்கும் அவளுக்கு. -
தெரிந்துகொண்டதிலிருந்து,
வெள்ளை மட்டுமே 
கலராய் உள்ளது எனக்கு...!

Dec 1, 2011

*********************

சிவந்த ஆப்பிளில் 
பனித்துளி படர்ந்தாட்போல்
அவள் கன்னத்தில் பூத்திருக்கும்
அந்த சில வியர்வைத் துளிகள்...!