நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Dec 19, 2011
******************
உன் மௌனம்களும்
நானங்களும்
காட்டிக் கொடுத்த பின்னும்
கண்களுக்குள்
காதலை வைத்து
இமைகளால்
மூடி மறைக்காதே பெண்ணே...!
Dec 17, 2011
***************
என்ன செய்தாய் என்னை..?
என்னுலகம் நின்ற பிறகும்
நான் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கிறேனே
உன்னை...!
Dec 15, 2011
*********************
"இன்று
மட்டும்
எனக்கு விடுமுறை வேணும்..!"
நம்மைப் பார்த்து
கெஞ்சுகிறது
கட்டில்..!
Dec 14, 2011
*********************
நீ மறதியில்
விட்டுச் சென்ற கைக்குட்டையை
எல்லா மலரோடும்
ஒப்பிட்டு பார்த்தேன் -
தோற்று போனது
மலர்களின் வாசமே..!
Dec 11, 2011
**********************
"செல்லமா இருக்கிறேன்பா..!"
என்று நீ சொல்லும்
ஒற்றைச் சொல்லில்
துள்ளிக் குதிக்குது
என் காதல்..!
Dec 9, 2011
********************
உன் கண்ணைப்
பார்த்து
கவிதை சொல்லவா..?
என் காதலின்
நுழைவாயில்
உன் இரு
கண்களல்லவா...!
Dec 8, 2011
****************
உன் காலடியில்
வரக் கூட
தகுதி இல்லாதவன் என்றா
என்னை -
நக்கல் பார்வை பார்க்கின்றன
உன் காலணிகள்..!
Dec 5, 2011
*****************
"நெற்றியில் முத்தமிடுங்க
ளே
ன்..."
ஆசையாய்
நீ
கேட்கையில்
அள்ளிக்கொள்ள
எண்ணுது
என் மனது..!
தள்ளி நின்று
தவிக்க வைக்கும் இப் -
பெண் மனது..!
Dec 3, 2011
**************************
வெள்ளைக் கலர் பிடிக்கும் அவளுக்கு. -
தெரிந்துகொண்டதிலிருந்து,
வெள்ளை மட்டுமே
கலராய் உள்ளது எனக்கு...!
Dec 1, 2011
*********************
சிவந்த ஆப்பிளில்
பனித்துளி படர்ந்தாட்போல்
அவள் கன்னத்தில் பூத்திருக்கும்
அந்த சில வியர்வைத் துளிகள்...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)