காலமே பதில் சொல்லும்
கண்களற்ற காதலுக்கு..
தலையில் -
எழுத்துப்பிழை இருப்பின்
இறைவனிடமா
காட்டமுடியும்..?
"நடப்பவை நன்மைக்கே"
நாகரிக சமாதானம்
புத்திக்கு மட்டும்..
உன்னுள் வாழும்
'உனக்கு..?'
வலிகள் தீர
அழுதுவிடு
மனதுக்குள் -
மௌனமாக..!