Jul 28, 2012

***********************

காலமே பதில் சொல்லும்
கண்களற்ற காதலுக்கு..

தலையில் -
எழுத்துப்பிழை இருப்பின்
இறைவனிடமா  
காட்டமுடியும்..?

"நடப்பவை நன்மைக்கே"
நாகரிக சமாதானம்
புத்திக்கு மட்டும்..

உன்னுள் வாழும்
'உனக்கு..?'

வலிகள் தீர 
அழுதுவிடு
மனதுக்குள் - 
மௌனமாக..!

Jul 27, 2012

*****************************

எதேர்ச்சையாகத்தான் 
அறிய நேர்ந்தது 
அந்நியப் பெண்ணுடனான 
அந்தப் பிரபல்யத்தின்
(அசிங்கமான) 
அந்தரங்க உரையாடலினை..

தடுமாற்றத்தின் 
மத்தியில் 
குழம்பிப்போனேன்
ஒரு சில நிமிடம்..

ஒளிந்திருப்பது -  
மனிதனுக்குள் மிருகமா..?
அல்லது 
மிருகத்துக்குள் மனிதனா..?

Jul 25, 2012

***********************

இலக்கணங்கள் அறிவதில்லை
என் கவிதைகள்..

ஒப்புக்கொள்ளவிட்டால் 
அது கவிதைகளாக அல்ல
என் 
கிறுக்கல்களாகவே இருக்கட்டும்..

இலக்கணம் எதற்கு..?

மௌனம்களின் மொழிகளும்,
மழலைகளின் ஒலிகளும் 
ஒரு வகைக் 
கவிதைகள் தானே..!

Jul 23, 2012

முதல் முத்தம்..!


உன் வீட்டுப்
பின்பக்கம்..

வழக்கமாக சந்திக்கும்
ரகசிய இடம்..

நிழல்களுக்குள்
நம்மை ஒடுக்கி..

மௌனம்களுக்குள்
வார்த்தைகளை புதைத்து..

சப்தமின்றி
சலனமின்றி..

ரகசியமாய் உறவாடுகையில்
தயங்கி கேட்டேன்
ஒரு முத்தம்..!


உன் வாப்பவோ,
உன் உம்மாவோ,
உன் ராத்தாவோ,
அல்லது
அக்கம் பக்கத்தாரோ..

யாரேனும்,
எப்போதேனும்
நம்மைக் கடக்கலாம்
அல்லது
கண்டுவிடலாம் 
எனும் பதட்டத்தில்..

கைகள் பிசைந்து
கண்கள் நோட்டமிட்டுக்கொண்டிருந்த  
எதிர்பாரா தருணத்தில்
தந்துவிட்டாய்..

இறுக்கமான,
ஈரமான
அழகிய இதழ் முத்தம்..!


முதல் முத்தம்
என்பதாலும்,
முடிவுக்கு கொண்டுவர இயலாத 
இன்பத்தாலும் 
மிதந்துகொண்டிருந்த 
என்னை..

இழுத்தெடுத்து
நிதானத்துக்கு
கொண்டுவந்து நிறுத்தியது
நீ சிந்திய
அந்த
வெட்கப் புன்னகை..!

இனம்புரியா இன்பம்
இருவருக்குள்ளும் 
உலா வர..

நாணத்தில் நனைந்து
பூமி பார்த்துக்கொண்டிருந்த
உன் முகத்தை
நிமிர்த்தியபோது..

உதடு கடித்தவளாய்,
மெதுவா கேட்டாய்..

" இன்னுமொன்று  தரவா...!! "