உன் வீட்டுப்
பின்பக்கம்..
வழக்கமாக சந்திக்கும்
ரகசிய இடம்..
நிழல்களுக்குள்
நம்மை ஒடுக்கி..
மௌனம்களுக்குள்
வார்த்தைகளை புதைத்து..
சப்தமின்றி
சலனமின்றி..
ரகசியமாய் உறவாடுகையில்
தயங்கி கேட்டேன்
ஒரு முத்தம்..!
உன் வாப்பவோ,
உன் உம்மாவோ,
உன் ராத்தாவோ,
அல்லது
அக்கம் பக்கத்தாரோ..
யாரேனும்,
எப்போதேனும்
நம்மைக் கடக்கலாம்
அல்லது
கண்டுவிடலாம்
எனும் பதட்டத்தில்..
கைகள் பிசைந்து
கண்கள் நோட்டமிட்டுக்கொண்டிருந்த
எதிர்பாரா தருணத்தில்
தந்துவிட்டாய்..
இறுக்கமான,
ஈரமான
அழகிய இதழ் முத்தம்..!
உன் உம்மாவோ,
உன் ராத்தாவோ,
அல்லது
அக்கம் பக்கத்தாரோ..
யாரேனும்,
எப்போதேனும்
நம்மைக் கடக்கலாம்
அல்லது
கண்டுவிடலாம்
எனும் பதட்டத்தில்..
கைகள் பிசைந்து
கண்கள் நோட்டமிட்டுக்கொண்டிருந்த
எதிர்பாரா தருணத்தில்
தந்துவிட்டாய்..
இறுக்கமான,
ஈரமான
அழகிய இதழ் முத்தம்..!
முதல் முத்தம்
என்பதாலும்,
முடிவுக்கு கொண்டுவர இயலாத
இன்பத்தாலும்
மிதந்துகொண்டிருந்த
என்னை..
இழுத்தெடுத்து
நிதானத்துக்கு
கொண்டுவந்து நிறுத்தியது
நீ சிந்திய
அந்த
வெட்கப் புன்னகை..!
இனம்புரியா இன்பம்
இருவருக்குள்ளும்
உலா வர..
நாணத்தில் நனைந்து
பூமி பார்த்துக்கொண்டிருந்த
உன் முகத்தை
நிமிர்த்தியபோது..
உதடு கடித்தவளாய்,
மெதுவா கேட்டாய்..
" இன்னுமொன்று தரவா...!! "
என்பதாலும்,
முடிவுக்கு கொண்டுவர இயலாத
இன்பத்தாலும்
மிதந்துகொண்டிருந்த
என்னை..
இழுத்தெடுத்து
நிதானத்துக்கு
கொண்டுவந்து நிறுத்தியது
நீ சிந்திய
அந்த
வெட்கப் புன்னகை..!
இனம்புரியா இன்பம்
இருவருக்குள்ளும்
உலா வர..
நாணத்தில் நனைந்து
பூமி பார்த்துக்கொண்டிருந்த
உன் முகத்தை
நிமிர்த்தியபோது..
உதடு கடித்தவளாய்,
மெதுவா கேட்டாய்..
" இன்னுமொன்று தரவா...!! "
No comments:
Post a Comment