May 21, 2011

*******************

கசக்கிப் பீய்த்து
தூரத்தில் தூக்கி எறியவா
பறித்துக்கொண்டாய் 
என் மனதை...?

விட்டு வைத்திருக்கலாம்
இன்னும் சிறிது காலம்,
பசுமையாய் இருந்திருக்கும்
உன்னோடான நினைவுகள்..!

கதறியழுது
கண்ணீர் தீர்ந்தபின்
கடைசியில் 
எஞ்சியதென்னவோ -

"ஏமாற்றப்பட்ட எண்ணங்களும், 
நிர்ப்பந்திக்கப்பட்ட நினைவுகளுமே..!"

No comments:

Post a Comment