Nov 13, 2011

என்னை உணர்கிறாயா...?


சொல் -

ஒவ்வொரு பொழுதிலும்
உன்னோடு நானிருக்கிறேனா...?

உன் ஒவ்வொரு நினைவுகளும்
என்னையே சுமந்திருக்கின்றனவா...?

பார்வையில்
பயணத்தில்
சோகத்தில்
சுவாசத்தில்
மாலையில் 
மௌனத்தில்
வார்த்தையில்
வாசத்தில்
என
ஒவ்வொரு நிலையிலும் 
என்னை உணர்கிறாயா...?

சொல் -
எந்த நிலையில்
உன்னோடு நானில்லை என்று -
'என் காதலின் குறையை கண்டறிய..!'

No comments:

Post a Comment