Nov 22, 2011

ஒரு முத்தம் போதும் அன்பே..!























உன்னை பார்த்த பிறகு
நின்று போனதெந்தன் உலகு
என் இதயம் மட்டும் இங்கே
துடிப்பது ஏனோ..!

என் நெஞ்சில் நீயும் உதிக்க
நான் என்ன தவம் செய்தேன்
என் கள்ள கண்கள் உன்னை 
தேடுவதேனோ..!

பாதை ஓரம் நீயும் 
என் பார்வை சுழலும் தன்னால் 
புரியாமல் செல்லும் கால்கள்
உன் பின்னால்..!

கெஞ்சிக் கேட்டு பார்த்தேன்
கண்ணால் பேசி சென்றாய்
நெஞ்சில் உன்னை சேர்த்தேன்
காதல் வாசம் தந்தாய்..!

என் காதல் வாழும் கண்ணே
உன் மூச்சி காற்றில் என்றும்
ஒரு முத்தம் போதும் அன்பே
என் உலகம் மீண்டும் இயங்கும்..!

No comments:

Post a Comment