துளி கூட சம்மதமில்லை...
'போகாதே நில்' என்று
உரிமையோடு தடுக்கும்
என் கரங்களை
உதாசீனம் செய்கிறாய்.
'அய்யோ, நான் சீக்கிரம் போகணும்பா..!"
என்ற சின்ன வாசகத்தை
கெஞ்சும் என் விழிகளுக்கு
விடையென வீசுகிறாய்.
அச்சம் கலந்த பயத்தில்,
போக துடிக்கும் பதட்டத்தில்,
உடைந்து போகும்
என் உணர்வுகளை
ஓரக்கண்ணால் நோக்குகிறாய்.
இப்போதும்-
உன்னை விட்டு பிரிவதில்
துளி கூட சம்மதமில்லை,
உன் துப்பட்டாவை பிடித்து
பின்னால் இழுக்கின்றன
என் சுவாசக் காற்று...
No comments:
Post a Comment