Jun 18, 2013

காதல்மனைவிக் காதல்..!


அதிகாலை நேரம்
சீக்கிரமே விழித்துக்கொண்டேன்,
அருகில் நீ 
அசந்து தூங்குகிறாய்..!


சற்று நேரம்
பால்கனியில் நின்றுகொண்டிருந்தபடி,
என்னை மறந்து
எதையோ யோசித்துக்கொண்டிருந்தேன் -

கையில் காபியுடன் 
என்னருகில் வந்து
என்னில் சாய்ந்துகொண்டபடி 
"இன்னும் கோபமாபா..?" என
நீ கேட்கும்வரையில்.


நினைவுகள் களைய,
நிதானத்துக்கு வந்தவனாய்
உன் முகம் பார்த்தேன்..!

"இரவு அப்படி பேசினதுக்கு Sorry  என..."
என்கிறாய்,
கொஞ்சலான பார்வையுடன்..!


அடி கள்ளி -
கண் விழித்ததும்
வழக்கம் போல
உன் தலை கோதி, 
கன்னத்தில் முத்தமிட்டேனே
கவனிக்கவில்லையா..??

இல்லை -
நீ கவனித்திருப்பாய்...!


புன்னகைக்கிறேன்

எந்த கவலையும் இல்லா 
குழந்தையாய் மாறி,

இன்னும் இன்னும்
பிடித்துப்போகிறது உன்னை..!


புன்னகைத்தபடியே நெஞ்சோடு 
உன்னை சேர்த்துக்கொள்கிறேன், 

புரிந்து கொண்டவளாய்
என் நெஞ்சுக்குள்ளேயே 
கண் மூடுகிறாய்..!


இரண்டே வயதுதான் ஆகிறது
நம் திருமணதிற்கு,  

இப்போவும் 
ரொம்ப அழகானது
நம் காதல்...!!

No comments:

Post a Comment