Jun 12, 2013

************************

உன் இதழோரம்
ஏதோவொன்று கடித்துவிட்ட
தழும்பைக் காட்டி
"வலிக்கிறது" என
சிணுங்குகிறாய்...

நெஞ்சோடு உன்னை
அள்ளி அணைத்தபடி
அங்கும் இங்குமாக தேடுகிறேன் -

கடித்துச் சென்ற 
அச் சிறுஜீவன்
கையில் அகப்படாதா என்று..!

No comments:

Post a Comment