Jun 19, 2013

ரோசக்காரி..!


கோபத்தில்
கத்தியே விட்டேன் -
"பேசாதே.... போய்விடு."
என்று...

ஒரு நிமிடம்தான்
என் கோபத்தின் 
மொத்த
ஆயுட்காலமும்...

அடுத்த நொடியிலிருந்து
ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்
நீ பேசும்
ஒற்றை வார்த்தைக்காய்...

ரோசக்காரி 
நீ -

இன்றுடன் 
ஒரு வாரமாகிறது
என்னுடன் 
நீ பேசி...

"நீ வந்து 
பேசிருக்கலாம்தானே..?"
என்னை பார்த்து
நீயும் கேட்கக்கூடும்..

நியாயமான கேள்விதான்
ஆனாலும், 
என்னை தடுப்பது 
எதுவோ..?

ஆண் என்ற
ஆணவமா..?
அல்லது, 
பிழை என்னில்லில்லை என்கின்ற
பிடிவாதமா..?

எதுவாகவோ இருந்துவிட்டு 
போகட்டும், ஆனாலும்
ஒன்றை மட்டும்
புரிந்துகொள்

"உன்னுடனான என்
காதல் மட்டும்தான் 
நிரந்தரம், -
கோபமில்லை..."   

No comments:

Post a Comment