அன்றொருநாள்,
தனிமையில் இருவரும்,
உன் கன்னத்தோடு
என் கன்னம் வைத்து..
உன் காதருகில்
என் உதடுகள்..
உன் தோடுகளை தாங்கிநின்ற பாகத்தை
பசிகொண்டு கவ்விட -
கூச்சம் கொண்ட இரு கரங்கள்
என் நெஞ்சில் மோதி
மெதுவாய் என்னை
விலக்கிய போது,
கண்டு கொண்டேன் -
காமதேவனின் யாகம்
உன்கண்களில் ஆரம்பமானதை...
No comments:
Post a Comment