Dec 14, 2010

தனிமையில் இருவரும்...


அன்றொருநாள், 
தனிமையில் இருவரும்,

உன் கன்னத்தோடு
என் கன்னம் வைத்து..

உன் காதருகில் 
என் உதடுகள்..

உன் தோடுகளை தாங்கிநின்ற பாகத்தை  
பசிகொண்டு கவ்விட -

கூச்சம் கொண்ட இரு கரங்கள்
என் நெஞ்சில் மோதி
மெதுவாய் என்னை
விலக்கிய போது,
கண்டு கொண்டேன் -

காமதேவனின் யாகம்
உன்கண்களில் ஆரம்பமானதை...

No comments:

Post a Comment