இன்னும் சிறிது காலம்தான்
உன் திருமணத்திற்கும்,
நம் காதல் அஸ்த்தமனத்திற்கும்...
கல்லூரிசாலையெங்கும்
நம் காதலின் தடங்கள்.
காலங்கள் கடந்தாலும்,
கனவுகள் முதுமையடைவதில்லை...
"கைவிட்டுப்போனபின்
கண்ணீர் கொண்டு
என்ன பயன்..?"
ஆறுதல் வார்த்தைகளுக்கு
அர்த்தமில்லை இங்கே...
இனியும் சொல்வதென்ன...!
"சோகங்களை சொந்தமாக்கிவிட்டேன்,
அழுதுகொள்ள அவகாசம் தாருங்கள்."
No comments:
Post a Comment