Sep 14, 2013

************************

இன்றாவது
என் பார்வையில் அவள் தென்படக்கூடும்
என்னும் தேடலிலேயே தொடங்குகிறது
அவளில்லா என் எல்லாப் பொழுதுகளும்.

மீண்டும் ஒருமுறை
அவளை சந்திக்கும்வரை
என் இம்முயற்சிகள்
முடியப்போவதுமில்லை.

என்றோ ஒருநாள்
இப்பிரிவின் கடைசிப்பக்கத்தில்
நானும் அவளும்
முட்டிக்கொள்வோம்.

அன்று -
உள்ளுக்குள்
அழுதுகொள்ளப்போவது 
நிச்சயம்.

நானும்;
என்போல் அவளும்..!

No comments:

Post a Comment