Sep 28, 2013

************************

இதோ
இப்போ கூட
அவளை நினைத்தபடியே
கிடக்கின்றேன்.

இன்னும் கொஞ்ச நேரம்தான் -
கடமையை  முடித்துவிட்டு
நிலவும் கிளம்பிவிடும்,
அடிவானம் சிவந்து
வெளிச்சமும் வெளிவந்துவிடும்.

தூக்கமின்றி சிவந்த விழிகளுடனும்,
அவளின்றி இருண்ட முகத்துடனும் - நான்

என்
இன்னுமொரு பொழுதின்
ஆரம்பத்தில்..!

No comments:

Post a Comment