Sep 11, 2013

************************

அடிக்கடி என்கனவில்
வந்துபோவதுதான்
அவளுடனான
சில நெருக்கக் காட்சிகள்.

கண்விழித்தும்
கலைந்து போகாக் கனவுகளில்
நீண்டு செல்வதுண்டு
ஒருசில வினாடிகள்.

விழியிலிருந்து வடியும்
அன்றைய ஆரம்பக் கண்ணீரில்
கண்ட கனவும்
மெல்லக் கரையும் -
அவள் நினைவுகளோ
விழித்தெழுந்துகொள்ளும்.

ஏனோ -
அவள் பிரிந்த பின்னும்
அவளால் ஆன இக் காதலை மட்டும்
இன்னும் இழுத்துப்பிடித்துக்கொண்டுதானிருக்கின்றது
கிறுக்குப் பிடித்த இவ்விதயம்.

No comments:

Post a Comment