Aug 16, 2013

************************

ஒரு சில
மிருகமாய்ப்
பிறந்திருக்கலாம்..!


அற்பத்தனமான
அரசியல் இலாபங்களுக்காய் 
தன சகோதரன் உயிரை
தானே கொன்று புசித்து,
இரத்தச் சாறு அருந்தும்
இழிவான மானிடனாய்  
இருப்பைதைக் காட்டிலும் -

வன்முறை அறியா 
வாழ்க்கை செய்யும் 
ஒரு சில மிருகமாய்ப்
பிறந்திருக்கலாம் ..!


கருணையற்றவர்களால் 
காயப்பட்டு, 
களத்தில்
கதறியழுதவர்களிடம்  
கேளுங்கள் - இந்த
மாண்புமிகு 
மானிடனைப் பற்றி;

கீழ் சாதி 
இந்த  
மனித ஜாதி 
என்பார்...!!

No comments:

Post a Comment