Aug 27, 2013

************************

பணம் தேடி கடல் கடந்து வெளிநாடு வந்தேன், இருந்ததை இழந்துவிட்டு. திரும்பிப் பார்க்கும் போதுதான் அங்கிருந்து அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர முடிகிறது. எல்லாத்தையும் விட்டு விட்டு நம்ம ஊருக்கே சென்று விடு என்று மனசு சொன்னாலும்; பொருளாதார நிலைமையும், என்னில் வந்து ஒட்டிக்கொண்ட சில பொறுப்புக்களும் இங்கேயே இருந்துவிட நிர்ப்பந்திக்கின்றது. 

பெறுமதி என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல என்பதை இழந்துவந்த ஒவ்வொன்றும் ஞாபகப்படுத்திகொண்டுதானிருகின்றன..!

No comments:

Post a Comment